வெள்ளி, 26 டிசம்பர், 2008

கொரியாவில் நடந்த சாம்சங் நிறுவன விழாவில் - ஓர் ஆயங்குடியான்....

கடந்த நவம்பர் 10 – 14 வரை நடந்த நவீன சிசிடிவி கேமராவின் அறிமுக விழாவில் அமீரகத்தின் அல் நூர் நிறுவனத்திலிருந்து கலந்துக்கொண்ட இருவர்களில் நமதூர் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவன் முஹம்மது தஸ்லீமும் ஒருவராக கலந்துக்கொண்டதில் ஆயங்குடி பெருமிதம் கொள்கிறது.

கொரியாவில் நடந்த இந்த அறிமுக விழாவில் சர்வதேச அளவிலிருந்து பல மேலை நாட்டு வல்லுனர்களும், சாம்சங் நிறுவனத்தின் தலைவரும் கலந்துக்கொண்டார் என்பதும், சிசிடிவி கேமராவை பற்றிய விரிவான உரை நிகழ்த்தியதற்காக சாம்சங் நிறுவனத்தின் தலைவரிடம் தஸ்லீம் அவர்கள் பரிசு பெற்றார் என்பதும் பெருமிதத்துடன் குறிப்பிட வேண்டிய ஒன்று.

முகம்மது தஸ்லீமுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புபவர்கள் +971-50-7005179 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு வாழ்த்தலாம்.