திங்கள், 28 ஜூன், 2010

கவிதை

கவிதை (ஒரு வேளை இது கவிதை இல்லையென்றால்... ஏதோ! என்று படியுங்கள்)

நம்பிக்கை!

நம்பிக்கை இல்லாத வீடுகளில் மனைவிகள் எல்லாம் விலைமாதர்கள்!
நம்பிக்கை இல்லாத மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எல்லாம் கொலைகாரர்கள்!
நம்பிக்கை இல்லாத வங்கிகளில் காசாளர்கள் எல்லாம் கொள்ளையர்கள்!

பாடம் :

நண்டின் கால் நாட்டியமாக இருந்தாலும்,
நத்தியாவட்டை செடியின் நளின சிரிப்பாக இருந்தாலும்,
நாட்டிய மங்கையின் குளுங்களாக இருந்தாலும்,
நாம் படிக்கும் புத்தமாக இருந்தாலும்,
எல்லாம் எமக்கு பாடம்! பாடம்! பாடம்!

வெங்காயம்

வெங்காயமே! வெங்காயமே!
நீயல்லவா காந்தியவாதி!
உரிக்க உரிக்க சும்மா இருந்துவிட்டு - பிறகு
உரித்தவனையே அழ வைத்துவிடுகிறாயே!
நீயல்லவா காந்தியவாதி!

வியாழன், 24 ஜூன், 2010

காதலில் சொதப்புவது எப்படி?

'காதலில் சொதப்புவது எப்படி?' - இப்படி ஒரு தலைப்பில் குறும் படம் வெளியானால் பார்க்காமல் இருப்போமா என்ன? எனது கணிணியில் அந்த படம் லோட் ஆவதற்கே சில நிமிடங்கள் பிடித்தன. நானும் விடுவதாக இல்லை. பார்த்தேன்! ரசித்தேன்!

முழுவதும் கல்லூரி மாணவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அடிபட்டு ஞானோதயம் வந்தது போல் கருத்து சொல்லும் கதாநாயகன் மீண்டும், காதலி அழைத்ததும் 'காதலில் விழுவது' யதார்த்தம்.

கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பாடம், இனியாவது சொதப்பாமல் காதலிக்க அவர்களுக்கு ஒரு நல்ல செயல் திட்ட வரையறை






பாருங்கள்! தங்களின் மேலான கருத்துகள் எதிர்பார்க்கபடுகிறது...

செம்மொழி மாநாட்டிற்கு அப்துல் கலாமிற்கு அழைப்பு இல்லை ???



செம்மொழி மாநாட்டிற்கு அப்துல் கலாம் அழைக்க படாதது குறித்து "பதவியில் இருக்கும் வரை தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள், இல்லாதபோது நினைக்கவே நேரம் பத்தாது, பதவி தானே மேடை ஏற ஒரே தகுதி... தனக்கு தானே புகழ் மாலை அணிந்துக்கொள்ளவும், மகனின் எதிர்கால இருக்கையை செம்மை படுத்துவதற்கும் தானே இந்த செம்மொழி மாநாடு!!"

"நாடாளுமன்ற உரையாகட்டும், எந்த மாநில அரசு கழ்ச்சியாகட்டும், எந்த மொழியை சேர்ந்த மாணவிகளுக்கு மத்தியிலான உரையாகட்டும் "திருக்குறளை" மேற்கோள் காட்டி பேசி, குறளிற்கு பெருமை சேர்த்தவர்... அவ்வளவு ஏன்? அவர் ஜனாதிபதியாக இருந்தபோது தானே தமிழை செம்மொழியாக அறிவித்தார்கள்... " என்று என்னிடம் ஒருவர் குமுறினார்...

என்ன இழவோ ? எனக்கொன்றும் புரியவில்லை... அணைத்திலும் அரசியல்...

"சரி இதற்கெல்லாம் அழைப்பு கொடுக்கவில்லை என்பதற்காக கோபித்து கொள்ளலாமா? கலைஞர், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தயாநிதி என தன் படை சூழ (மக்களை ஏமாற்றி) 343 கோடி ருபாய் செலவில், நிலையான குடும்ப ஆட்சிக்கு எடுக்கும் விழா என்று தானே சொல்லுகிறீர்கள், பிறகு எப்படி அழைப்பை எதிபார்க்கலாம்?", என்றேன்...

என்ன? நான் பேசியது சரிதானே?

மேலும் அவர்,

"கலைஞருக்கு ரஜினி, கமல், தமிழின கலாச்சாரத்தில் அசைக்க முடியாத (?) கொண்ட குஷ்பு, வெளிமாநிலத்திலிருந்து அமிதாபச்சன் போன்றவர்கள் தானே முக்கியமானர்கள்" "திரை கூத்தாடிகளுக்கு வாரி வாரி வழங்குவதில் தானே எம் அரசு சக்கை போடு போடுகிறது" "விலை வாசி கிர்ரென்று எகுறி கொண்டிருக்கும் அதே வேளையில், எதை பற்றியும் கவலை படாமல் நடிகைகளின் நடன நிகழ்ச்சியை கண்டுகளித்து விட்டு, அவர்கள் பல (?) வழிகளில் சம்பாதிப்பது போதாதென்று, இலவச நிலம் வேறு வழங்குகிறார்" என்றெல்லாம் தமிழின தலைமகனை தூற்றி பேசினார்...

அதற்கு மேல் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை... வாயை மூடி கொண்டு, கலைஞர் டிவியில் மானாட மயிலாட பார்த்து கொண்டிருந்தேன்...

(என கருத்து உங்களுக்கு 'வஞ்சகப் புகழ்ச்சி' போல் தோன்றினால், அதற்கு நான் பொறுப்பல்ல...)

வெள்ளி, 26 டிசம்பர், 2008

கொரியாவில் நடந்த சாம்சங் நிறுவன விழாவில் - ஓர் ஆயங்குடியான்....

கடந்த நவம்பர் 10 – 14 வரை நடந்த நவீன சிசிடிவி கேமராவின் அறிமுக விழாவில் அமீரகத்தின் அல் நூர் நிறுவனத்திலிருந்து கலந்துக்கொண்ட இருவர்களில் நமதூர் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவன் முஹம்மது தஸ்லீமும் ஒருவராக கலந்துக்கொண்டதில் ஆயங்குடி பெருமிதம் கொள்கிறது.

கொரியாவில் நடந்த இந்த அறிமுக விழாவில் சர்வதேச அளவிலிருந்து பல மேலை நாட்டு வல்லுனர்களும், சாம்சங் நிறுவனத்தின் தலைவரும் கலந்துக்கொண்டார் என்பதும், சிசிடிவி கேமராவை பற்றிய விரிவான உரை நிகழ்த்தியதற்காக சாம்சங் நிறுவனத்தின் தலைவரிடம் தஸ்லீம் அவர்கள் பரிசு பெற்றார் என்பதும் பெருமிதத்துடன் குறிப்பிட வேண்டிய ஒன்று.

முகம்மது தஸ்லீமுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புபவர்கள் +971-50-7005179 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு வாழ்த்தலாம்.

திங்கள், 22 டிசம்பர், 2008

கீழக்கரை தோழனிடமிருந்து தெளிவானதோர் கடிதம் - இயக்கவாதிகளின் சிந்தணைக்கு ....

இன்றைய நிலையில் தமிழக முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு மிகப்பெரும் சவாலாக விளங்குபவர்கள் முஸ்லிம் பெயரைத் தன்னில் கொண்ட தமுமுக -வும் ஏகத்துவத்தைத் தன் பெயரில் கொண்ட ததஜவும் தான்.இந்த இரு அரசியல் அணிகளும் ஒன்றிணைந்தால் சமுதாயத்திற்குக் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
இவர்கள் பிரிந்து நிற்பதற்காகச் சொல்லப்படும் காரணிகளில் முக்கியமானது
பணப்பிரச்சனை.
இவர்கள் இடையிலான ஒற்றுமை:
இரு அணிகளுமே முஸ்லிம்கள்.இனி இவர்கள் பிரிந்து நின்று அணி சேர்ந்துள்ளவர்களைக் குறித்துப் பார்ப்போம்:
முதலில் தமுமுக ஆதரவு தெரிவிக்கும் கருணாநிதி.
1. ஜெயலலிதா இறக்குமதி செய்த பாஜக-வை தமிழகத்தில் வளர்த்தி விட்டவர்.
2. முஸ்லிம்களுக்கு நெஞ்சில் இடம் தருவதாக அல்வா கொடுப்பதில் நீண்ட நெடிய சுமார் 40 வருட பாரம்பரிய அனுபவம் உள்ளவர்.
3. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவிகளை 10 வருடம் சிறையிலிட்டு 150 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களைச் சீரழித்தவர்..
4. அந்தக் குண்டு வெடிப்பிற்குக் காரணமான 19 முஸ்லிம்களின் படுகொலை சம்பவத்தை வெற்றிகரமாக பாசிச சங்க்பரிவாரக் கும்பலுடன் இணைந்து நடத்திய காவல்துறை உயர் அதிகாரிகளுக்குப் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தவர்.
5. அயல் ராஜ்யங்களான இலங்கை மற்றும் மலேசியாவில் குடியுரிமைப் பெற்று அந்நாட்டவர்களாக வாழ்பவர்களுக்குப் பிரச்சனை என்றவுடன் தன் நிலை மறந்து கவிதையாகவும் உரைநடையாகவும் ஆற்றாமையை வெளிப்படுத்தியவர், இந்தியாவிற்கு உள்ளேயே இந்தியக் குடிமகன்களாக வாழும் குஜராத் முஸ்லிம்கள் 3000க்கும் மேற்பட்டவர்கள் அநியாயமாகப் படுகொலைச் செய்யப்பட்டச் சம்பவத்தைக் குறித்துக்கருத்துக் கேட்கப்பட்ட பொழுது, 'அது அம்மாநிலத்தின் உள் பிரச்சனை' எனக் கூறி நழுவியவர்.
(கருணாநிதி ஓர் பச்சை துரோகச் சந்தர்ப்பவாதி என்பதற்கு இதனை விட வேறு ஆதாரம் ஏதும் தேவையில்லை).இப்படிப்பட்ட அயோக்கியனுடன் தான் சகோதரர்களிடமிருந்துப் பிரிந்து தமுமுக கூட்டணி வைத்துள்ளது.
இனி எம்.ஜி.ஆர் வளர்த்த அண்ணா திராவிட கட்சியை சுருட்டி கக்கத்தில் வைத்துள்ள ஜெயலலிதா குறித்து:சட்டமன்றத்திலேயே தன்னை ஓர் பாப்பாத்தி என வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட இவளைக் குறித்துக் கூடுதலாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
எனினும்,
1. இறையில்லமான பாபர் மசூதியை இடிக்க ஆதரவு தெரிவித்த இந்தியாவிலேயே ஒரே மாநில முதலமைச்சர் மட்டுமன்றி தமிழகத்திலிருந்து பாபர் மசூதியை இடிக்கக் கரசேவக ரவுடிகளை அரசு செலவிலேயே அனுப்பியவள்.
2. வடக்கில் இரத்த அறுவடை செய்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் பரிவாரமான பாஜகவைத் தமிழகத்திற்கு முதன்முதலாக இறக்குமதி செய்த, அண்ணா திராவிடக் கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்கும் பாப்பாத்தி!!!
3. 3000க்கு மேற்பட்ட முஸ்லிம்களை உயிரோடு அறுத்தும் எரித்தும் நரதாண்டவமாடியச் சம்பவத்திற்குப் பிறகு நரமாமிச உண்ணி மோடி தேர்தலில் வெற்றி பெற்ற உடன் அடக்கமுடியாத மகிழ்ச்சியில் நேரடியாகவே சென்று பூங்கொத்து வழங்கி (3000 முஸ்லிம்களைக் கொன்று குவித்து வெற்றி வாகை சூடியதற்கு) வாழ்த்துக் கூறிய தேசப்பற்று மிக்க தாரிகை!!!. (முஸ்லிம்களைக் கருவறுப்பதில் ஆனந்தமடையும்பார்ப்பனக் கும்பலைச் சேர்ந்த இவள் முஸ்லிம்கள் என வரும் பொழுது தனது இனத்தோடு சேர்ந்துக் கொள்வாள் என்பதற்கு இதனைவிட வேறு பெரிய தெளிவு ஏதும் தேவையில்லை)
4. இந்தியா அடக்குமுறையில் இருந்த ஆங்கிலேயன் காலத்திலேயே இருந்த உரிமை சுதந்திரத்திற்குப் பின் துரோக ஆட்சியாளர்களால் வஞ்சகமாகப் பறிக்கப்பட்ட உரிமை - இட ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு எப்பொழுதுமே தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் எங்குமே கிடைக்கக் கூடாது என சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதற்கு எதிராக விஷயத்தைக் கொட்டி வருபவள்.
5. இன்னும் பல அடுக்கலாம். இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.இப்படிப் பட்ட மனம் நிறைய நஞ்சுடன் வலம் வரும் இந்தப் பார்ப்பன வெறிப்பிடித்தவளுடன் தான், இணைந்திருந்தால் தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படும் எனச் சகோதரர்களிடமிருந்துப் பிரிந்து வந்த ஏகத்துவத்தின் காவலர்களான ததஜ, 'ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு தருவேன்' என்ற வாக்குறுதியைப் பேணாத(மெரீனா மாநாட்டில் இவள் தந்த வாக்குறுதியும் பின்னர் அவ்வாறுதரவேயில்லை எனக் கூறியதையும் நினைவில் கொள்ளவும்) இந்த நயவஞ்சகியுடன் சமரசம் செய்துக் கொண்டு கூட்டணி வைத்துக் கொண்டது
(இவ்விடம் முஃமின் ஒரு பொந்தில் ஒரு முறையே கொட்டு கொள்வான் என்ற நபிமொழியையும் நாம் நினைவில் நிறுத்துவோம்.
மேலும் தமுமுகவுடன் இருந்தால் தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு இடையூறு வரும், பாப்பாத்தி ஜெயலலிதாவுடன் இருந்தால் தவ்ஹீத் பிரச்சாரத்திற்குப்பாதுகாப்பு கிடைக்குமோ - மத மாற்றத் தடைச் சட்டம் நினைவுக்கு வரவேண்டும்)
இனி இவர்கள் மத்தியில் உள்ள முக்கியமான ஓர் ஒற்றுமை
திராவிடக் காவலன் கருணாநிதி, அண்ணா திராவிட பாப்பாத்தி ஜெயலலிதா இந்த இரு நயவஞ்சகக் கில்லாடிகளுமே முஸ்லிம்கள் அல்ல - யதார்த்தப் படைப்பாளனுக்கு எதிரிகள்.உண்மையாக நினைத்துப் பார்த்தால் உடம்பு புல்லரிக்கவெ செய்கிறது - நமது சமுதாயக் காவலர்களாக அடையாளம் காட்டி வரும் ததஜ மற்றும் தமுமுக தலைவர்கள் தங்களுக்கிடையில் ஒன்றுமில்லா உலக விஷயங்களுக்காகப் பிரிந்து நின்றுக் கொண்டு, இந்த நயவஞ்சகக் கூட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து அதற்கான நியாயங்களாகச் சப்பைக் கட்டுகளைக் கட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து!ததஜ, தமுமுக தலைவர்களே திருந்துங்கள்! அல்லது நிச்சயம் வல்ல இறைவனால் திருத்தியமைக்கப்படுவீர்கள்!சமுதாயத் தலைவர்களே! செல்லுமிடமெல்லாம் கேள்வி, பதில் பகுதி வைத்து அதிலும் அரசியல் விளையாட்டு நடத்தும் உங்களிடம் இந்த எளியோனின் ஓர் சிறு கேள்வி:
இறைவனின் எதிரிகளுடன் கூட்டணி வைக்கவும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் உங்களுக்குக் கிடைத்தக் காரணங்களில் ஒன்று கூடவா உங்கள் சகோதர இயக்கங்களுடன் ஒருங்கிணைந்துச் செல்வதற்கும் அவர்களுடன் ஓரிடத்தில் அமர்ந்துச் சமுதாயப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் குறித்து அலசுவதற்கும் கிடைக்கவில்லை?இதற்கான பதில் நீங்கள் சொல்லியே ஆக வேண்டும். இல்லையெனில் இக்கேள்வி உங்களை மறுமை வரை விரட்டிக் கொண்டே இருக்கும்.
தீர்வு:
1. தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் முக்கிய இந்த இரு அணிகளுமே தங்களுக்கிடையில் ஒரே கருத்துள்ள சில விஷயங்களிலாவது ஒன்றிணைந்துச் செயல்படலாம் என ஓர் குறைந்தப் பட்ச ஒப்பந்தம் செய்து கொள்வது.
2. எக்காரணம் கொண்டும் சகோதரர்கள் இழிவு படும் விதமாகப் பொது இடங்களில் அவர்களின் குறைகளைப் பேசுவதில்லை என உறுதி எடுத்துக் கொள்வது(ஒரு முஃமின் இன்னொரு முஃமினுக்குப் பாதுகாவலனாவான். அவனின் பெருமைக்கு இழுக்கு ஏற்பட அவன் எவ்வகையிலும் காரணமாக இருக்க மாட்டான்)

3. தங்களுக்குள் ஏற்பட்ட குறைந்தப் பட்ச விஷயங்களில் உள்ள உடன்படிக்கையினை எடுத்துக் கொண்டு மற்றைய ஜாக், மனித நீதி பாசறை, ஜமாஅத்தே இஸ்லாமி, தப்லீக், ஜமாஅத்துல் உலமா என அனைத்து அமைப்புகளையும் ஒவ்வொன்றாக சமீபித்து அவ்விஷயங்களில் ஒருங்கிணைந்துச் செயல்பட வருமாறு அவர்களுக்கும் ஒற்றுமைக்கான அழைப்பு விடுத்தல்.தற்பொழுதைக்கு இவ்வளவு போதும்.
ஒரு சிறு ஆரம்பம் மட்டுமே நம்மிடமிருந்து வேண்டும்.அதாவது மனதார ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம். அதன் அடிப்படையிலான முன் முயற்சி. இதனை மட்டும் செய்ய ஆரம்பித்து விட்டால் பின்னர் உள்ள வழிகள் ஒவ்வொன்றையும் வல்ல இறைவன் அழகாக அமைத்துத் தந்து விடுவான் இன்ஷா அல்லாஹ்!நாம் ஒரு அடி நகர்ந்தால் இறைவன் இரு அடிகளும் நாம் நடந்தால் இறைவன் ஓடியும் நாம் ஓடினால் இறைவன் நமது கைகளாகவும் கால்களாவுமே மாறி விடுவான் என்பதை நாம் நினைவில் நிறுத்துவோம்.இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது நிற்கும் இடத்திலிருந்து ஒரு அடி முன் எடுத்து வைப்பதை மட்டுமே.அதனை எடுத்து வைக்க முஸ்லிம்களின் வாழ்வுரிமைக்காகப் போராடுவதாக உரிமைகோரும் தமுமுகாவோ அல்லது ஏகத்துவத்தின் காவலர்களாகத் தங்களை அடையாளம் காட்டும் ததஜாவோ, யார் முதலில் முதல் அடியை எடுத்து வைக்கின்றீர்களோ அவர்களுக்கு இறைவனின் முழு அருளும் இரு உலகிலும் காத்திருக்கின்றது என்பதை மறவாதீர்கள்.
நன்றி : இறை நேசன்
ஆயங்குடி தோழர்களே, மேலே இடப்பட்ட இடுக்கையின் கருத்து தங்களுக்கு சரியென பட்டிருக்குமேயானால், பிரதிகள் எடுத்து இயக்கங்களால் மூளைக் கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கு கொடுங்கள்.
நமதூரிலும் மேல் கூறப்பட்ட விதத்தில் ஒற்றுமைக்கு வழி தேடவேண்டும்.

சனி, 29 நவம்பர், 2008

காஷ்மீரில் என்ன நடக்கிறது...? - பேரா. அ. மார்க்ஸ்

காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு ‘பூலோக சொர்க்கம்’ என்று இன்னொரு பெய ருண்டு. சுற்றிலும் வெள்ளிப் பனிமலை கள், நகரின் பெரும் பகுதியை விழுங்கி நிற்கும் ‘டால்’ ஏரியில் மிதக்கும் படகு வீடுகள், எங்கும் குடை பரப்பி நிற்கும் சினார் மரங்கள், கிரிக்கெட் மட்டைகள் செய்யப் பயன்படும் வில்லோ மரக் காடுகள், பள்ளத்தாக்கினூடே ஊடறுத் துப் பாயும் ஜீலம் மற்றும் லிட்டர் நதிகள், சாலையின் இரு புறங்களிலும் அழகாக வெட்டி வளர்க்கப்பட்ட குங்குமப்பூ பாத்தி கள், கூரிய நாசியும், நெடிய உருவமும் கொண்ட ஆண்கள், ரோஜா மலர்களை ஒத்த கள்ளம் கபடமற்ற அழகிய பெண் கள்... இதுதான் காஷ்மீர். அப்படித்தான் நாம் புத்தகங்கள் வாயிலாக அறிந்துள் ளோம்.

நேரில் பார்த்த போதுதான் இந்தப் பூலோக சொர்க்கம் இன்று பூலோக நரக மாக ஆக்கப்பட்டுள்ளதை அறிய முடிந் தது. ஒவ்வொரு பத்தடிக்கும் இரண்டு இராணுவ வீரர்கள், கையில் ஏ.கே.47, எஸ்.எல்.ஆர்., என நமக்குப் பெயர் தெரியாத இன்னும் என்னென்னவோ ஆயுதங்களை வைத்துக் கொண்டு நிற்கும் காட்சிகள். இவை தவிர பங்கர் களுக்குள்ளிலிருந்து எட்டிப் பார்க்கும் துப்பாக்கி முனைகள், விர்ரிட்டுப் பறக்கும் வாகனங்களினூடாக வெளியே துருத்திக் கொண்டிருக்கும் பைனட் கள்... நூறு துப்பாக்கி முனைகட்டு நடுவே நடப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தி விடுகின்றன. சில நாட்களுக்கு முன்னர் இராணுவத் தாக்கு தலுக்குள்ளான ஒரு கிராமத்திற்கு நாங் கள் அழைத்துச் செல்லப்பட்டோம். ஷியா பாத் என்பது அந்தக் கிராமத்தின் பெயர். ஸ்ரீநகரிலிருந்து ஆனந்த்நாக் போகும் வழியில் த்ரால் என்னும் சிறு நகரில் இடப்புறமாகத் திரும்பிப் போனால் உள்ளே உள்ள ஒரு கிராமம் அது. ஆப்பிள் தோட் டங்களினூடாக எங்களின் இரு வாகனங் களும் மெதுவாகச் சென்று கொண்டிருந்த போது மூன்று இராணுவ முகாம்களைக் கடக்க வேண்டியிருந்தது. இது எல் லைக் காவல்படை (க்ஷளுகு) முகாம்; இது சி.ஆர்.பி.எப். முகாம், இது ராணுவ முகாம் என ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டிச் சொல்லிக் கொண்டே எங்கள் டாடா சுமோவை ஒட்டிக் கொண்டிருந்தார் அந்த ஓட்டுநர்.

எங்கள் குழுவில் ஒரு ஆவணப் படத் தயாரிப்பாளரும் இருந்தார். மேற்கு வங்கத்துக்காரர் சிதாங்ஷு என்பது அவர் பெயர். யாரு டனும் பேசமாட் டார். தானுண்டு தன் காமிரா உண்டு என காணும் ஒவ் வொன்றையும் படம் எடுத்துத் தள்ளுவார் அவர். டிஜிட்டல் காமிரா தானே ஃபிலிம் வீணாகும் என்ற கவலையும் இல்லை. அவருடைய காமிரா லென்ஸ் எங்கள் வண்டியின் ஜன் னல்வழியா முகாமை நோக்கித் திரும்பியபோது, பதறிப் போனார் ஓட்டுனர். “என்ன காரியம் செய்தீர்கள்? அதோ நிற்கும் `சென்ட்ரி`களில் யாருடைய கண்ணிலா வது பட்டால் யார் என்ன என்று விசாரிக் காமல் படபடவென சுட்டுப் பொசுக்கி விடுவார்கள்’’ எனச் சொன்ன போதுதான் எங்களுக்கு உறைத்தது.

ஷாபாத் ஒரு மலை அடிவாரக் கிராமம். சாலைகள் கூடக் கிடையாது. சுமார் 2 கி.மீ. தொலைவில் வண்டியை நிறுத்தி விட்டு குறிப்பு நோட்டையும், காமிராவை யும் மட்டும் எடுத்துக் கொண்டு, குளிரில் நடுங்கிக் கொண்டே நடந்துதான் போனோம். கோதுமையை அறுத்து போரடித் துக் கொண்டிருந்தார்கள். அசல் காஷ்மீரத்துக் கிராமம். தொள தொளவென அங்கிகள் அணிந்திருந்த சிறுவர்கள் எங்களை வேடிக்கைப் பார்த் தார்கள். மண் சுவர்கள், மரத்தாலான மாடிகள். ஜன்னல்கள் வழியே எட்டிப் பார்த்த பெண்களை தயக்கத்துடன் புகைப்படம் எடுத்த போது, அவர்கள் தயங்கவில்லை. ஸ்ரீநகர் பார்கவுன் சில் செயலாளரான வழக்குரைஞர் ஷஹீன் என்பவர்தான் எங்களுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்று கொண் டிருந்தார்.

நடுக் கிராமத்தில் நெருக்கமான வீடுகளுக்கு மத்தியில் ஒரு புல்டோசர் உழுது கொண்டிருந்தது. இங்கென்ன விவசாயம் நடக்கிறது என்று பார்த்தால் இடிந்து மன்னோடு மன்னாகிக் கிடந்த இரு வீடுகளை புல்டோசர் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். எங்கள் குழுவைக் கண்டவுடன் ஊர் மக்கள் ஆண்களும், பெண்களும் சிறுவர்களுமாக சூழ்ந்து கொண்டனர். இடிந்த வீடுகளில் ஒன்றின் உரிமையா ளர் குலாம் ஹாஸன்பட்டை இராணுவம் கைது செய்து கொண்டு போயிருந்தது. அவரது சகோதரர் முகமது பட் எங்க ளிடம் பேசினார். அன்று அக்டோபர் 7ம் தேதி. செப்டம்பர் 29ந் தேதியன்று சுமார் 1000 பேரடங்கிய ஆயுதம் தாங்கிய ஒரு பெரும் படை அந்த கிராமத்திற்குள் புகுந்துள்ளது. அதற்கும் முந்தைய இரண்டு வாரத்தில் பலமுறை தீவிரவாதி களைத் தேடுகிறோம் என்கிற பெயரில் பலமுறை அக்கிராமம் சுற்றி வளைக்கப் பட்டு (ஊடிசனநநேன) சல்லடைத் தேடல் நடந்துள்ளது. இம்முறை இன்னும் பெரிய படை. வந்தவுடன் அருகிலுள்ள வீடுகள் எல்லாவற்றையும் காலி செய்யச் சொல்லி உத்தரவிடப்பட்டது. எல்லோரும் ஓடியிருக் கிறார்கள். நகை, பணம், கோதுமை, கோழி, ஆடுகள் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள். சற்று நேரத்தில் மிகப்பெரிய வெடிச் சத்தம்.

அடுத்த நாள் படை வீரர்கள் இடி பாடுகளுக்கிடையிலிருந்து ஒரே ஒரு உடலை மட்டும் கண்டெடுத்துக் கொண்டு குலாம்ஹாசனையும் கைது செய்து கொண்டு வெளியேறிய பின் மக்கள் திரும்பி வந்து பார்த்த போதுதான் இரண்டு வீடுகள் தரைமட்டமாகிக் கிடந்ததைக் காண முடிந்தது. அருகிலி ருந்த வீடுகள் எல்லாம் வெடி அதிர்ச்சி யில் விரிசல் விட்டிருந்தன. நாங்கள் சென்றபோது உடைந்த சுவர்களை அவர்கள் செப்பனிட முயற்சித்துக் கொண்டிருந்தனர். இழுத்துச் சென்ற உடல் ஜெய்ஷே முஹம்மத் அமைப்பின் டிவிஷனல் கமாண்டர் என அவர்களுக் குச் சொல்லப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து அருகிலுள்ள நூர்புராவில் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் வீட்டிலுள்ள நகை, விலையுயர்ந்த பொருட்கள், ஏன் சேமித்து வைத்திருந்த கோதுமை மூட்டைகளும் கூட இராணுவத் தாரால் கொள்ளை அடித்துச் செல்லப் பட்டு விட்டன என சுற்றியிருந்த வீட்டுப் பெண்கள் புலம்பினர்.

காஷ்மீரில் இதெல்லாம் சகஜம். திடீரென ஒரு வீட்டிற்குள் புகுந்த ஒரு முப்பது பேருக்குத் தேநீர் தயாரியுங்கள் என ஒரு இராணுவ கமாண்டர் சொன்னால், உடனடியாக அவர்கள் அதைச் செய்துதர வேண்டும். காஷ்மீரி கள் விருந்தோம்பலுக்குப் பெயர் போனவர்கள். யாருக்கும் எப்போதும் அவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும்வரை காஷ்மீரிகள் தேநீரும் உணவும் கொடுக்கத் தயாராக இருப்பார் கள். நாங்கள் இருந்த சில தினங்களிலும் கூட அந்த விருந்தோம்பலை அனுபவித் தோம். ஆனால் இப்படித் திமிராக உள்ளே நுழைந்து, தங்களின் ரத்த சொந்தங் களை அன்றாடம் கொன்று குவிக்கும் இந்திய இராணுவப் படையினர் உள்ளே நுழைந்து ‘சாயா’ வேண்டுமென்றால் அம் மக்களின் மனநிலை எப்படி இருக் கும்? இருந்தாலும் அவர்கள் அதைச் செய்துதான் தரவேண்டும். வேறு அவர் களுக்கு ‘சாய்ஸ்’ கிடையாது. தேநீர் விநியோகிக்கும் போது அழகான பெண் கள் யாரும் தட்டுப்பட்டால் சிறிது நேரம் கழித்து அவர்களில் சிலர் திரும்பி வரக் கூடும். இம்முறை வேறு காரணங் களுக்காக. இப்படி ஏராளமாக நடந் திருக்கிறது. பெரியவர் சையத் அலிஷா கீலானி அவர்கள் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் ஆதாரங்களுடன் இத்தகைய சம்பவங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் திரும்பிய போது இருட்டி விட்டது. இருட்டில் வண்டி ஓட்டுவது காஷ்மீரில் இரட்டைச் சிரமம். எதிரில் ஒரு இராணுவ வீரனையோ, பங்கரையோ, வாகனத்தையோ, முகாமையோ, செக் போஸ்டையோ பார்த்தீர்களானால் உடனே வண்டியின் முன் வெளிச்சத்தை (ழநயன டுiபாவ) நிறுத்திவிட்டு, உள்ளே உள்ள விளக்கைப் போட வேண்டும். அவர்களைக் கடந்தவுடன் மீண்டும் உள் விளக்கை அணைத்துவிட்டு வெளி விளக்கைப் போட வேண்டும். அதற்குள் அடுத்த இராணுவ வீரன் எதிர்பட்டு விடுவான். “இது எங்க ளுக்குப் பழக்கமாகி விட்டது’’ என்றார் ஓட்டுநர். அவர் பெயர் காஸிம் பட்.

“இன்று பரவாயில்லை சார். நாம் வந்து விட்டோம். சில நேரங்களில் முகாம்களுக்கு எதிராக உள்ள செக்போஸ்ட்களில் சாலையை அடைத்துவிட்டுப் போய்விடுவார் கள். மறுபடி அடுத்த நாள் காலை வரை அந்தக் கிராமத்துக்குள் யாரும் வரவும் முடியாது, வெளியே போகவும் முடியாது’’ என்றார் காஸிம். ஆம். அப்படியாகும் போது அறிவிக்கப்படாத ஊரடங்குச் சட்டமாக அம் மக்கள் கருதிக் கொள்ள வேண்டியதுதான்.

நாங்கள் ‘த்ராலை’ அடைந்த போது இரவு 7 மணி இருக்கும். ஊரே அடங்கி யிருந்தது. அங்கொன்றும் இங்கொன்று மாகத் தெரிந்த இராணுவ ஜீப்கள், வீரர்களின் நடமாட்டம் தவிர கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை. காஷ்மீரில் இரவு ஏழு மணிக்கெல்லாம் ஊரடங்கி விடுகிறது. மறுபடி காலை 8 மணிக்குப் பிறகுதான் தெருவில் நடமாட்டம் தென் படுகிறது. இராணுவ ஜீப்கள் வந்து சாலை களில் போடப்பட்ட தடைகளை நீக்கிய வுடன்தான் போக்குவரத்து ஏற்படும். இரவில் திடீரென யாருக்காவது உடல் நலமில்லாமல் போனால் கூட வெளியே செல்வது சற்றுச் சிரமந்தான். ஊரடங்குச் சட்டம் இல்லாவிட்டாலும் அதுவே நிலைமை.

அமர்நாத் பிரச்சினைக்குப் பின் காஷ்மீர் நிலைமைகளை நேரில் கண்டறி யவும், அக்டோபர் 6ந்தேதி ‘காஷ்மீர் கூட்டுச் செயல்பாட்டுக் குழு’ (முயளாஅசை ஊடி-டிசனiயேவiடிn ஊடிஅஅவைவநந) அறிவித்தி ருந்த லால் சவுக் பேரணியை நேரில் காணவும் ஏற்பாடு செய்திருந்த அகில இந்திய உண்மை அறியும் குழுவில் தமிழ்நாட்டிலிருந்து நானும் சுகுமாரனும் பங்கு பெற்றிருந்தோம். பேராசிரியர் அமித் பட்டாச்சார்யா, எஸ்.ஏ.ஆர்.கீலானி, ரோனா வில்சன் இன்னும் நான்கு வங்கத்து நண்பர்கள், கேரளத்திலிருந்து ‘மாத்யமம்’ இதழாசிரியர் வி.எம்.இப்றாகிம் என பத்து பேர் கொண்ட குழு எங்க ளுடையது. அக்.3ம் தேதி இரவு எட்டு மணிக்கு டெல்லியிலிருந்து ஜம்மு வழி யாக ஸ்ரீநகருக்கு சாலை வழியில் செல்கிற குழுவில் நானிருந்தேன். எங்க ளில் நால்வர் விமானம் மூலம் டெல்லி யிலிருந்து ஸ்ரீநகர் புறப்பட இருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமா கச் செல்லும் அந்த ஆம்னி பஸ் எங்க ளை அடுத்த நாள் மதியம் 12 மணி சுமாருக்கு ஜம்முவில் விட்டது. உடனடி யாக ஒரு டாடா சுமோவை அமர்த்திக் கொண்டு ஸ்ரீநகர் புறப்பட்டோம். எங்கள் ஆறு பேருக்கும் அந்தக் காஷ்மீரி ஓட்டு நர் கேட்டது வெறும் 1500 ரூபாய்தான். இறங்கும் போதுதான் அவர் காரணத் தைச் சொன்னார். ஒருவேளை லால் சவுக் பேரணியை ஒட்டி ஊரடங்கு உத்தரவிடப்பட்டால் இரண்டு நாளோ, மூன்று நாளோ ஜம்முவிலேயே தங்க நேரிடும். எனவே கிடைத்த காசுக்குப் புறப்பட்டு விட்டதாகச் சொன்னார் அவர்.

மலைப் பாதைகளினூடாக காஷ்மீரின் அழகை ரசித்துக் கொண்டே நாங்கள் சென்றபோது எங்களுக்கு முதல் அதிர்ச்சி செய்திகிடைத்தது. விமானத்தில் சென்ற வர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் எங்கே எனத் துருவித் துருவி விசாரிக் கின்றனர் என்பதே அச் செய்தி.
காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு ‘பூலோக சொர்க்கம்’ என்று இன்னொரு பெய ருண்டு. சுற்றிலும் வெள்ளிப் பனிமலை கள், நகரின் பெரும் பகுதியை விழுங்கி நிற்கும் ‘டால்’ ஏரியில் மிதக்கும் படகு வீடுகள், எங்கும் குடை பரப்பி நிற்கும் சினார் மரங்கள், கிரிக்கெட் மட்டைகள் செய்யப் பயன்படும் வில்லோ மரக் காடுகள், பள்ளத்தாக்கினூடே ஊடறுத் துப் பாயும் ஜீலம் மற்றும் லிட்டர் நதிகள், சாலையின் இரு புறங்களிலும் அழகாக வெட்டி வளர்க்கப்பட்ட குங்குமப்பூ பாத்தி கள், கூரிய நாசியும், நெடிய உருவமும் கொண்ட ஆண்கள், ரோஜா மலர்களை ஒத்த கள்ளம் கபடமற்ற அழகிய பெண் கள்... இதுதான் காஷ்மீர். அப்படித்தான் நாம் புத்தகங்கள் வாயிலாக அறிந்துள் ளோம்.

நேரில் பார்த்த போதுதான் இந்தப் பூலோக சொர்க்கம் இன்று பூலோக நரக மாக ஆக்கப்பட்டுள்ளதை அறிய முடிந் தது. ஒவ்வொரு பத்தடிக்கும் இரண்டு இராணுவ வீரர்கள், கையில் ஏ.கே.47, எஸ்.எல்.ஆர்., என நமக்குப் பெயர் தெரியாத இன்னும் என்னென்னவோ ஆயுதங்களை வைத்துக் கொண்டு நிற்கும் காட்சிகள். இவை தவிர பங்கர் களுக்குள்ளிலிருந்து எட்டிப் பார்க்கும் துப்பாக்கி முனைகள், விர்ரிட்டுப் பறக்கும் வாகனங்களினூடாக வெளியே துருத்திக் கொண்டிருக்கும் பைனட் கள்... நூறு துப்பாக்கி முனைகட்டு நடுவே நடப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தி விடுகின்றன. சில நாட்களுக்கு முன்னர் இராணுவத் தாக்கு தலுக்குள்ளான ஒரு கிராமத்திற்கு நாங் கள் அழைத்துச் செல்லப்பட்டோம். ஷியா பாத் என்பது அந்தக் கிராமத்தின் பெயர். ஸ்ரீநகரிலிருந்து ஆனந்த்நாக் போகும் வழியில் த்ரால் என்னும் சிறு நகரில் இடப்புறமாகத் திரும்பிப் போனால் உள்ளே உள்ள ஒரு கிராமம் அது. ஆப்பிள் தோட் டங்களினூடாக எங்களின் இரு வாகனங் களும் மெதுவாகச் சென்று கொண்டிருந்த போது மூன்று இராணுவ முகாம்களைக் கடக்க வேண்டியிருந்தது. இது எல் லைக் காவல்படை (க்ஷளுகு) முகாம்; இது சி.ஆர்.பி.எப். முகாம், இது ராணுவ முகாம் என ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டிச் சொல்லிக் கொண்டே எங்கள் டாடா சுமோவை ஒட்டிக் கொண்டிருந்தார் அந்த ஓட்டுநர்.

எங்கள் குழுவில் ஒரு ஆவணப் படத் தயாரிப்பாளரும் இருந்தார். மேற்கு வங்கத்துக்காரர் சிதாங்ஷு என்பது அவர் பெயர். யாரு டனும் பேசமாட் டார். தானுண்டு தன் காமிரா உண்டு என காணும் ஒவ் வொன்றையும் படம் எடுத்துத் தள்ளுவார் அவர். டிஜிட்டல் காமிரா தானே ஃபிலிம் வீணாகும் என்ற கவலையும் இல்லை. அவருடைய காமிரா லென்ஸ் எங்கள் வண்டியின் ஜன் னல்வழியா முகாமை நோக்கித் திரும்பியபோது, பதறிப் போனார் ஓட்டுனர். “என்ன காரியம் செய்தீர்கள்? அதோ நிற்கும் `சென்ட்ரி`களில் யாருடைய கண்ணிலா வது பட்டால் யார் என்ன என்று விசாரிக் காமல் படபடவென சுட்டுப் பொசுக்கி விடுவார்கள்’’ எனச் சொன்ன போதுதான் எங்களுக்கு உறைத்தது.

ஷாபாத் ஒரு மலை அடிவாரக் கிராமம். சாலைகள் கூடக் கிடையாது. சுமார் 2 கி.மீ. தொலைவில் வண்டியை நிறுத்தி விட்டு குறிப்பு நோட்டையும், காமிராவை யும் மட்டும் எடுத்துக் கொண்டு, குளிரில் நடுங்கிக் கொண்டே நடந்துதான் போனோம். கோதுமையை அறுத்து போரடித் துக் கொண்டிருந்தார்கள். அசல் காஷ்மீரத்துக் கிராமம். தொள தொளவென அங்கிகள் அணிந்திருந்த சிறுவர்கள் எங்களை வேடிக்கைப் பார்த் தார்கள். மண் சுவர்கள், மரத்தாலான மாடிகள். ஜன்னல்கள் வழியே எட்டிப் பார்த்த பெண்களை தயக்கத்துடன் புகைப்படம் எடுத்த போது, அவர்கள் தயங்கவில்லை. ஸ்ரீநகர் பார்கவுன் சில் செயலாளரான வழக்குரைஞர் ஷஹீன் என்பவர்தான் எங்களுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்று கொண் டிருந்தார்.

நடுக் கிராமத்தில் நெருக்கமான வீடுகளுக்கு மத்தியில் ஒரு புல்டோசர் உழுது கொண்டிருந்தது. இங்கென்ன விவசாயம் நடக்கிறது என்று பார்த்தால் இடிந்து மன்னோடு மன்னாகிக் கிடந்த இரு வீடுகளை புல்டோசர் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். எங்கள் குழுவைக் கண்டவுடன் ஊர் மக்கள் ஆண்களும், பெண்களும் சிறுவர்களுமாக சூழ்ந்து கொண்டனர். இடிந்த வீடுகளில் ஒன்றின் உரிமையா ளர் குலாம் ஹாஸன்பட்டை இராணுவம் கைது செய்து கொண்டு போயிருந்தது. அவரது சகோதரர் முகமது பட் எங்க ளிடம் பேசினார். அன்று அக்டோபர் 7ம் தேதி. செப்டம்பர் 29ந் தேதியன்று சுமார் 1000 பேரடங்கிய ஆயுதம் தாங்கிய ஒரு பெரும் படை அந்த கிராமத்திற்குள் புகுந்துள்ளது. அதற்கும் முந்தைய இரண்டு வாரத்தில் பலமுறை தீவிரவாதி களைத் தேடுகிறோம் என்கிற பெயரில் பலமுறை அக்கிராமம் சுற்றி வளைக்கப் பட்டு (ஊடிசனநநேன) சல்லடைத் தேடல் நடந்துள்ளது. இம்முறை இன்னும் பெரிய படை. வந்தவுடன் அருகிலுள்ள வீடுகள் எல்லாவற்றையும் காலி செய்யச் சொல்லி உத்தரவிடப்பட்டது. எல்லோரும் ஓடியிருக் கிறார்கள். நகை, பணம், கோதுமை, கோழி, ஆடுகள் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள். சற்று நேரத்தில் மிகப்பெரிய வெடிச் சத்தம்.

அடுத்த நாள் படை வீரர்கள் இடி பாடுகளுக்கிடையிலிருந்து ஒரே ஒரு உடலை மட்டும் கண்டெடுத்துக் கொண்டு குலாம்ஹாசனையும் கைது செய்து கொண்டு வெளியேறிய பின் மக்கள் திரும்பி வந்து பார்த்த போதுதான் இரண்டு வீடுகள் தரைமட்டமாகிக் கிடந்ததைக் காண முடிந்தது. அருகிலி ருந்த வீடுகள் எல்லாம் வெடி அதிர்ச்சி யில் விரிசல் விட்டிருந்தன. நாங்கள் சென்றபோது உடைந்த சுவர்களை அவர்கள் செப்பனிட முயற்சித்துக் கொண்டிருந்தனர். இழுத்துச் சென்ற உடல் ஜெய்ஷே முஹம்மத் அமைப்பின் டிவிஷனல் கமாண்டர் என அவர்களுக் குச் சொல்லப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து அருகிலுள்ள நூர்புராவில் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் வீட்டிலுள்ள நகை, விலையுயர்ந்த பொருட்கள், ஏன் சேமித்து வைத்திருந்த கோதுமை மூட்டைகளும் கூட இராணுவத் தாரால் கொள்ளை அடித்துச் செல்லப் பட்டு விட்டன என சுற்றியிருந்த வீட்டுப் பெண்கள் புலம்பினர்.

காஷ்மீரில் இதெல்லாம் சகஜம். திடீரென ஒரு வீட்டிற்குள் புகுந்த ஒரு முப்பது பேருக்குத் தேநீர் தயாரியுங்கள் என ஒரு இராணுவ கமாண்டர் சொன்னால், உடனடியாக அவர்கள் அதைச் செய்துதர வேண்டும். காஷ்மீரி கள் விருந்தோம்பலுக்குப் பெயர் போனவர்கள். யாருக்கும் எப்போதும் அவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும்வரை காஷ்மீரிகள் தேநீரும் உணவும் கொடுக்கத் தயாராக இருப்பார் கள். நாங்கள் இருந்த சில தினங்களிலும் கூட அந்த விருந்தோம்பலை அனுபவித் தோம். ஆனால் இப்படித் திமிராக உள்ளே நுழைந்து, தங்களின் ரத்த சொந்தங் களை அன்றாடம் கொன்று குவிக்கும் இந்திய இராணுவப் படையினர் உள்ளே நுழைந்து ‘சாயா’ வேண்டுமென்றால் அம் மக்களின் மனநிலை எப்படி இருக் கும்? இருந்தாலும் அவர்கள் அதைச் செய்துதான் தரவேண்டும். வேறு அவர் களுக்கு ‘சாய்ஸ்’ கிடையாது. தேநீர் விநியோகிக்கும் போது அழகான பெண் கள் யாரும் தட்டுப்பட்டால் சிறிது நேரம் கழித்து அவர்களில் சிலர் திரும்பி வரக் கூடும். இம்முறை வேறு காரணங் களுக்காக. இப்படி ஏராளமாக நடந் திருக்கிறது. பெரியவர் சையத் அலிஷா கீலானி அவர்கள் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் ஆதாரங்களுடன் இத்தகைய சம்பவங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் திரும்பிய போது இருட்டி விட்டது. இருட்டில் வண்டி ஓட்டுவது காஷ்மீரில் இரட்டைச் சிரமம். எதிரில் ஒரு இராணுவ வீரனையோ, பங்கரையோ, வாகனத்தையோ, முகாமையோ, செக் போஸ்டையோ பார்த்தீர்களானால் உடனே வண்டியின் முன் வெளிச்சத்தை (ழநயன டுiபாவ) நிறுத்திவிட்டு, உள்ளே உள்ள விளக்கைப் போட வேண்டும். அவர்களைக் கடந்தவுடன் மீண்டும் உள் விளக்கை அணைத்துவிட்டு வெளி விளக்கைப் போட வேண்டும். அதற்குள் அடுத்த இராணுவ வீரன் எதிர்பட்டு விடுவான். “இது எங்க ளுக்குப் பழக்கமாகி விட்டது’’ என்றார் ஓட்டுநர். அவர் பெயர் காஸிம் பட்.

“இன்று பரவாயில்லை சார். நாம் வந்து விட்டோம். சில நேரங்களில் முகாம்களுக்கு எதிராக உள்ள செக்போஸ்ட்களில் சாலையை அடைத்துவிட்டுப் போய்விடுவார் கள். மறுபடி அடுத்த நாள் காலை வரை அந்தக் கிராமத்துக்குள் யாரும் வரவும் முடியாது, வெளியே போகவும் முடியாது’’ என்றார் காஸிம். ஆம். அப்படியாகும் போது அறிவிக்கப்படாத ஊரடங்குச் சட்டமாக அம் மக்கள் கருதிக் கொள்ள வேண்டியதுதான்.

நாங்கள் ‘த்ராலை’ அடைந்த போது இரவு 7 மணி இருக்கும். ஊரே அடங்கி யிருந்தது. அங்கொன்றும் இங்கொன்று மாகத் தெரிந்த இராணுவ ஜீப்கள், வீரர்களின் நடமாட்டம் தவிர கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை. காஷ்மீரில் இரவு ஏழு மணிக்கெல்லாம் ஊரடங்கி விடுகிறது. மறுபடி காலை 8 மணிக்குப் பிறகுதான் தெருவில் நடமாட்டம் தென் படுகிறது. இராணுவ ஜீப்கள் வந்து சாலை களில் போடப்பட்ட தடைகளை நீக்கிய வுடன்தான் போக்குவரத்து ஏற்படும். இரவில் திடீரென யாருக்காவது உடல் நலமில்லாமல் போனால் கூட வெளியே செல்வது சற்றுச் சிரமந்தான். ஊரடங்குச் சட்டம் இல்லாவிட்டாலும் அதுவே நிலைமை.

அமர்நாத் பிரச்சினைக்குப் பின் காஷ்மீர் நிலைமைகளை நேரில் கண்டறி யவும், அக்டோபர் 6ந்தேதி ‘காஷ்மீர் கூட்டுச் செயல்பாட்டுக் குழு’ (முயளாஅசை ஊடி-டிசனiயேவiடிn ஊடிஅஅவைவநந) அறிவித்தி ருந்த லால் சவுக் பேரணியை நேரில் காணவும் ஏற்பாடு செய்திருந்த அகில இந்திய உண்மை அறியும் குழுவில் தமிழ்நாட்டிலிருந்து நானும் சுகுமாரனும் பங்கு பெற்றிருந்தோம். பேராசிரியர் அமித் பட்டாச்சார்யா, எஸ்.ஏ.ஆர்.கீலானி, ரோனா வில்சன் இன்னும் நான்கு வங்கத்து நண்பர்கள், கேரளத்திலிருந்து ‘மாத்யமம்’ இதழாசிரியர் வி.எம்.இப்றாகிம் என பத்து பேர் கொண்ட குழு எங்க ளுடையது. அக்.3ம் தேதி இரவு எட்டு மணிக்கு டெல்லியிலிருந்து ஜம்மு வழி யாக ஸ்ரீநகருக்கு சாலை வழியில் செல்கிற குழுவில் நானிருந்தேன். எங்க ளில் நால்வர் விமானம் மூலம் டெல்லி யிலிருந்து ஸ்ரீநகர் புறப்பட இருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமா கச் செல்லும் அந்த ஆம்னி பஸ் எங்க ளை அடுத்த நாள் மதியம் 12 மணி சுமாருக்கு ஜம்முவில் விட்டது. உடனடி யாக ஒரு டாடா சுமோவை அமர்த்திக் கொண்டு ஸ்ரீநகர் புறப்பட்டோம். எங்கள் ஆறு பேருக்கும் அந்தக் காஷ்மீரி ஓட்டு நர் கேட்டது வெறும் 1500 ரூபாய்தான். இறங்கும் போதுதான் அவர் காரணத் தைச் சொன்னார். ஒருவேளை லால் சவுக் பேரணியை ஒட்டி ஊரடங்கு உத்தரவிடப்பட்டால் இரண்டு நாளோ, மூன்று நாளோ ஜம்முவிலேயே தங்க நேரிடும். எனவே கிடைத்த காசுக்குப் புறப்பட்டு விட்டதாகச் சொன்னார் அவர்.

மலைப் பாதைகளினூடாக காஷ்மீரின் அழகை ரசித்துக் கொண்டே நாங்கள் சென்றபோது எங்களுக்கு முதல் அதிர்ச்சி செய்திகிடைத்தது. விமானத்தில் சென்ற வர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் எங்கே எனத் துருவித் துருவி விசாரிக் கின்றனர் என்பதே அச் செய்தி.